தீவிரமாகும் மாண்டஸ் புயல்காற்று மழை எப்போது?
வணக்கம். செல்லகுமார் பேசுறேன். இரண்டாயிரத்தி இருபத்தி ரெண்டு, டிசம்பர் ஆறு. செவ்வாய்கிழமை, இரவு ஏழு மணி நிலவரம், ஒரு நிமிடம் இவருக்கு, அதிகாரப்பூர்வ நல்லறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த, நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது தற்பொழுது, சென்னைக்கு, தென்கிழக்கே, எண்ணூத்தி எழுபத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவிலே, நிலை கொண்டிருக்கிறது. இது மெல்ல, மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி, நகர்ந்து, படிப்படியாக, தீவிரமடைந்து, நாளை, மாலை, அது, புயலாக உருவெடுக்கும். தீவிர புயலாக கூட, உருவெடுக்கலாம். கண்டிப்பாக, புயலாக உருவெடுக்கும் இது நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கிழக்கே வரும் பொழுது, தமிழகத்திற்கு மழைப்பொழிவை தொடங்கும். நெருங்கி வராது, ரொம்ப தொலைவுல இருக்கும். மெல்ல வடகடலோரத்திற்கு நெருங்கி வந்து, வட கடலோர கரையை கடக்குவதற்கு முன்பே, தொட்ட உடன் செயலிழக்கும். ஆக, இது இரண்டு நாட்களுக்கு கரையோரமாக இருந்து கொண்டு, எட்டாம் தேதி, ஒன்பதாம் தேதி இரண்டு நாளும், கொடுக்கும். தமிழகத்திலே தரை காற்றுடன். தரைக்காற்று என்பது புயலை நோக்கி செல்லும் காற்று.
புயல் தரை ஏறாது. புயலுக்கு போகும் காற்று மட்டுமே. அதனால மழைப்பொழிவு அனைத்து மாவட்டங்களுக்கும் உண்டு. விரிவான அறிக்கை கேட்டு பயன்பெறுக
