நள்ளிரவுக்கு பின்னர் எங்கெங்கே மழை அதிகரிக்கும். வரும் நாள்கள் எப்படி? உங்களுக்கு எப்போது

0

நள்ளிரவுக்கு பின்னர் எங்கெங்கே மழை அதிகரிக்கும்.
வரும் நாள்கள் எப்படி?உங்களுக்கு  எப்போது

2022 நவம்பர் இரண்டு புதன்கிழமை இரவறிக்கை . வங்கக் கடலில் உருவாகி இருந்த அந்த காற்று சுழற்சியானது செயலிழந்து டெல்டா பகுதியில் நீடித்து கொண்டிருக்கிறது. இது மேலும் செயலிழந்து மேற்கு நோக்கி நகர இருக்கிறது. புதிய காற்று சுழற்சி நாளை மறுதினம் டெல்டா மாவட்டங்களை ஒட்டி வந்து தென் மாவட்டங்களுக்கு நோக்கி திசை மாதிரி குமரிக்கடல் பகுதியை நோக்கி திரும்பியிருக்கிறது. இந்த அடுத்தடுத்து நிகழ்வு காரணமாக 6ம் தேதி வரை கண்டிப்பாக மழை இருக்கும்.ஏழு,எட்டு தேதிகளில் தீவிரம் குறைந்து ஆங்காங்கே மழைப் பொழிவு இருக்கும். தற்போது டெல்டா மாவட்டங்களை அதாவது மன்னார்குடி, தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. இந்த மழைப்பொழிவு வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை, தகட்டூர் போன்ற பகுதிகளை நோக்கி முன்னேறி மழையை  நிறைவு செய்யும். மீண்டும் நள்ளிரவுக்குப் பின் அதிகாலையில் மழைப்பொழிவ தொடங்கி நாளை காலை வரை ஆங்காங்கே மழைப்பொழிவை கொடுக்கும். தென் மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் எல்லாம் வரக்கூடிய மணி நேரங்களில் நாளையும் நல்ல மழை பொழிவு கொடுத்து இருக்கிறது. சென்னை மழை தீவிரம் குறையும். இனிமேல் வட கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு தீவிரம் குறைந்து தென் மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழை பெய்யக்கூடும். விரிவான அறிக்கையை பார்த்து பயன்பெறுக. 


Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform





Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog