காற்று சூழற்சி மழை தொடரும்.அக் 21,22 இல் தொடங்கும் பருவ மழை உங்களுக்கு எப்படி?

2

 அறுவடைக்கும் தீபாவளிக்கும் மழை இடைவெளி எப்படி?



2022, அக்டோபர் 17 திங்கட்கிழமை அதிகாலை நிலவரம். நேற்றைக்கும், தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், உள் மாவட்டங்களுக்கு, நல்ல மழை கொடுத்தது. டெல்டா மாவட்டங்கள்ல, லேசான மழை, தூறல் மழை, நாகப்பட்டினம் மாவட்டத்துல, தற்பொழுது தூறல் மழை காணப்படுகிறது. வட கடலோர மாவட்டங்கள்ல, வட மாவட்டங்கள்ல, லேசான மழை, ஆங்காங்கே காணப்படுகிறது. தமிழகத்தில, வட கடலோர மாவட்டங்கள், உயர் அழுத்தத்தில் இருக்கிறது. புதிய காற்று சுழற்சி, அந்தமான் கடற்பகுதியில, உருவாகிவிட்டது. அது, படிப்படியாக, மேற்கு நோக்கி வந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாகி வரக்கூடிய பத்தொன்பதாம் தேதி, கிழக்கு காற்றலையை தொடக்கும். கிழக்கு காற்றின் காரணமாக, வங்க கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் உட்பட, டெல்டா மாவட்டங்கள் உட்பட, பத்தொன்பதாம் தேதியிலிருந்து, கிழக்கு காற்று மழையும், 20 தேதி, கிழக்கு, வடகிழக்கு காற்று மழையும், பிறகு, 21,22 தேதிகள்ல, வடகிழக்கு பருவமழையை இலங்கைக்கும், தமிழகத்திற்கும் அப்பால் அதாவது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு, அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வந்து, வடகிழக்கு பருவமழையை தொடங்கும். பிறகு, அதுவே தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மற்றும் இன்று புயல் என்ற அளவிலே, தீவிரமடைந்து, ஆந்தரா  பகுதியை நோக்கி, விலகிச் செல்லும். ஆக, மழைப்பொழிவெல்லாம்,வரக்கூடிய நாட்கள்ல இருக்கிறது, இடைவெளியும் இருக்கிறது, இடையூறும் இருக்கிறது, தீபாவளிக்கு இடைவெளியும் இருக்கிறது, என்பதையும் தெரியப்படுத்த விரும்புகிறேன். தொடர்ந்து, மாலை நேரத்திலே இணைந்திருங்கள். 









Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform





Post a Comment

2Comments
Post a Comment

Search This Blog