நெருங்கிய மழை நிகழ்வு. ஜனவரியிலும் நிகழ்வுகள் வியப்பூட்டும்

0
24.12.2024  ந. செல்வகுமார் வானிலை ஆய்வறிக்கை  தொகுப்பு:

அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சித்துறை  அறிக்கையை பார்க்கவும்.*




அடுத்தடுத்த நிகழ்வுகள் 
வரிசையில் 

நிகழ்வு-1

டிசம்பர் 24 முதல் டிசம்பர் 27 முடிய

வங்கக் கடலில் உருவான தாழ்வுப்பகுதி கடந்த டிசம்பர் 17 18 தேதிகளில் தமிழ்நாட்டில் மிக கனமழை பொழிவை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடலில் மட்டும் இரு காற்று இணைப்பை ஏற்படுத்தி கடலில் கனமழை பொழிவை கொடுத்துக் கொண்டு சென்னை உள்ளிட்ட வடகடலோர பகுதியில் மிதமான மழைப்பொழிவை கொடுத்துக்கொண்டு வடதமிழ்நாடு கரைக்கு கிழக்கு பகுதி வரை நகர்ந்து பிறகு ஆந்திர மாநிலக் கரையை ஒட்டி சென்று பிறகு விலகி தாழ்வு மண்டலம் வரை தீவிரமடைந்து மீண்டும் செயலிழந்து.
நம் கணிப்பில் எதிர்பார்த்தது போல 
இந்த நிகழ்வு டிசம்பர் 17 18 தேதிகளில் தமிழ்நாட்டின் கரையே நெருங்காமல் விலகி சென்றாலும் மீண்டும் தமிழ்நாட்டின் கரையை நோக்கி திரும்பி மத்திய தமிழ்நாட்டின் கடலோரம் வந்தடைந்து செயலிழந்து தமிழ்நாடு ஊடாக மேற்கு நோக்கி பயணித்து அனைத்து மாவட்டங்களுக்கும் மழை பொழிவை கொடுக்கும் என்று முன்பே கணித்திருந்த நிலையிலும் தொடர்ந்து உறுதிப்படுத்தி வந்த நிலையிலும் நிகழ்வானது U Turn அடித்து தமிழ்நாடு நோக்கி திரும்ப தொடங்கி இருக்கிறது.

உலக வானிலை மாதிரிகள் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினாலும் நாம்  இமயமலை மேற்கத்திய இடையூறு இந்த நிகழ்வை ஈர்த்து செல்லாது என்பதற்கான பல்வேறு புள்ளி விபரங்களுடன் காரணிகளை தெளிவாக விளக்கி தமிழ்நாடு திரும்பும் என்று உறுதிபட அறிவித்த நிலையில் தற்பொழுது இந்திய வானிலை ஆய்வு நிறுவனமும் தமிழ்நாடு திரும்பும் என்று இன்றைய அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறது. 

இந்த சுற்று மழைப் பொழிவின் குணம் 
வங்கக்கடல் நிகழ்வு தமிழ்நாடு கரையை நெருங்கி வருகின்ற போதிலும் நிகழ்விற்கு நிலநடுக்கோட்டு வெப்பநீராவி கிடைக்கப்பெறவில்லை. காரணம் தென் அரைக்கோளத்தில் வலுவான நிகழ்வு உருவாகி நீராவி காற்றை வடக்கே அனுப்பாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. 
பசிபிக் பெருங்கடலில் இருந்து வரும் நீராவி காற்றை சுமத்திரா தீவு அருகே உருவாகி இருக்கக்கூடிய காற்று சுழற்சி கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. 
தமிழ்நாடு கரை நெருங்கக் கூடிய நிகழ்விற்கு வெப்ப நீராவி காற்று கிடைக்கப் பெறாமல் ஒற்றை குளிர் காற்று மட்டும் கிடைக்கப்பெற்று தமிழ்நாடு கரை நெருங்கும். 

குளிர் காற்று மழை பொழிவை ஏற்படுத்த வெப்பம் தேவை என்பதால் கரையோர கடற் பகுதியில் அதிகாலை நேரத்தில் மழையும், கடலோரம் மற்றும் உள் பகுதிகளில் உள் மாவட்ட பகுதிகளில் வெயில் வந்து வெப்பம் கொடுத்த பிறகு காலை மதியம் மாலை நேரங்களில் மழை பொழிவை கொடுக்கும். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவு நேரம் மழை பொழிவு கொடுக்கலாம். 
கடலோரம் இரவில் மழை இருக்க வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில் மேற்கு மாவட்டங்களில் மாலை முன்னிரவில்  டிசம்பர் 26 27 தேதிகளில் மழை இருக்கும்.

வானிலை எதிர்பார்ப்பு 

. டிசம்பர் 24 

நிகழ்வு வடக்கடலோர மாவட்டங்களுக்கு கிழக்கு புறம் வந்து அமைந்ததும் கிழக்கு வடகிழக்கு காற்று இணைவு வடகடலோர மாவட்டங்களில் அமைந்து சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் புதுச்சேரி ஆகிய மாவட்ட பகுதிகளில் மதியம் மாலை நேரங்களில் லேசான அல்லது  மிதமானது மழை பொழிவை ஒரு சில இடங்களில் கொடுக்கும். 


டிசம்பர் 25 
கிறிஸ்துமஸ் தினத்தன்று மதியம் வடகடலோரம் ஆங்காங்கே ஆங்காங்கே மிதமானது முதல் சற்று கனமழை வரை மழை பொழிவையும் கொடுக்கத் தொடங்கும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் வட உள் மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் லேசான மழை ஆங்காங்கே ஆங்காங்கே கொடுத்து மழையின் தொடக்கமாக அமையும்.

டிசம்பர் 26 27 

நிகழ்வானது டெல்டா கரையை நெருங்கி செயலிழந்து தமிழ்நாட்டின் வளிமண்டலம் வழியாக மேற்கு நோக்கி பயணிக்கும் என்பதனால் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் அனைத்து உள் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கர்நாடக ஆந்திர எல்லையோரம் மாவட்டங்கள் அனைத்திற்கும் மிதமானது முதல் சற்று கனமழை வரை பரவலாக கொடுக்கும். ஆங்காங்கே ஆங்காங்கே கன மிக கனமழை மொழிவையும் கொடுக்க வாய்ப்பு.
பெரும்பாலும் மழை பொழிவு வெயில் வந்ததும் வெப்பம் உயர்ந்ததும் பகல் நேரங்களில் இருக்கும். இரவு நேரங்களில் மேகமூட்டத்துடன் குளிர்  நிலவும், அதிகாலை நேரத்தில் கரையை ஒட்டிய கடற்பகுதியில் மழை இருக்கும்.

டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மேற்கண்ட நாள்களில்  சில மணி நேரங்கள் பரவலான கன மிக கனமழை பொழிவு தெரிகிறது. டிசம்பர் 26 27 இரண்டு நாட்களும் தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு சாதகம் தெரிகிறது.

நிகழ்வு 2
தெற்கு மத்திய வங்கக் கடற் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையுடன் தென் சீன கடல் நிகழ்வும் இணைந்து டிசம்பர் 28 தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கி டிசம்பர் 29 30 31 ஜனவரி 1 ,2 தேதிகளில் இலங்கை கரையை நெருங்கி இலங்கை தென் தமிழ்நாடு டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் கன மழைப்பொழிவு தெரிகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் அந்த நாளில் மழை வாய்ப்பு தெரிகிறது. ஆனால் டெல்டா தென்கடல் வரும் ஒட்டுமொத்த தென் மாவட்டங்கள் நிறைய மழை பொழிவை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
நிகழ்வு 3
ஜனவரி 7 8 9 10 ஆகிய தினங்களில் புதிய நிகழ்வு உருவாகி
நிகழ்வு இரண்டு வந்த வழித்தடத்தில் நிகழ்வு மூன்றும் வந்து மீண்டும் டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் நிகழ்வு இரண்டு கொடுத்தது போலவே அனைத்து மாவட்டங்களுக்கும் அதே மழைப்பொழிவை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் நிகழ்வுகள் ஜனவரியில் இலங்கை ஒட்டி வந்து பொங்கல் பொங்கலுக்குப் பிறகும் தூறல் சாரல் லேசான மழை பொழிவுகள் கொடுக்க வாய்ப்பு தெரிகிறது. 

குறிப்பு 

 டிசம்பர் 26 27 மழை பொழிவை விட டிசம்பர் 30 31 ஜனவரி 1 2 நிகழ்வில் மழைப்பொழிவு கூடுதல் தெரிகிறது. அதைவிட ஜனவரி 8 9 10 11 தேதிகளில் வரும் வலுவான நிகழ்வு நிறைய மழைப்பொழிவை கொடுப்பதற்கு சாதகம் தெரிகிறது

ந.செல்வகுமார்
வெளியீடு.

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog