இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, டிசம்பர் இருபத்தி ஒன்று, புதன்கிழமை, இரவு ஏழு மணி, ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும்.
நிகழ்வானது, இலங்கைக்கு கிழக்கு பகுதியை அடைந்திருக்கிறது. வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு, வடக்கு நோக்கி நகர்ந்து, பிறகுதான், அது, தென்மேற்கு திசையை நோக்கி திரும்பி, வட இலங்கையில் கரை கடந்து, இலங்கையோட மேற்கு பகுதிக்கு வந்து, மன்னார் வளைகுடா வழியாக, குமரி கடல் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இதன் காரணமாக, இன்று காலையில் இருந்து, வேதாரண்யம் பகுதிகள்லயும், தலைஞாயிறு ஒன்றிய கடலோர பகுதிகள்லயும், கனமழை பொழிந்து வருகிறது வேதாரண்யத்திலே, விட்டு, விட்டு கனமழை. இது, தகடூர் உள்ளிட்ட பகுதிகள் வரைக்கும், ஒன்றிய பகுதிகள்ல, வேதாரண்யம் ஒன்றிய பகுதிகள்ல நீடிக்கிறது. புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட, கடலோர பகுதிகளிலும் மழை நாளை, நாளை மறுநாள், மழை பொடி பிடித்தவரும், குறைந்திருந்தாலும், மீண்டும், இருபத்தி நான்காம் தேதிக்கு பிறகு, இருபத்தைந்திலிருந்து, இருபத்து எட்டு வரை, வட இலங்கை கடந்து, மன்னார் வளைகுடா வழியாக, குமரி கடலை அடையும்போது, கனமழை காத்திருக்கிறது. வானிலையுடன் இணைந்திருங்கள்