குளிரலை குறுக்கீடு வடதமிழகம் வந்து தென் தமிழகம் திரும்பும். நவ 20 முதல் 27 முடிய மழை எங்கே? எப்படி?

0

குளிரலை குறுக்கீடு வடதமிழகம் வந்து தென் தமிழகம் திரும்பும்.
நவ 20 முதல் 27 முடிய மழை எங்கே? எப்படி?

 







வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் பதினெட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை, ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரபூர்வமான அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை பார்க்கவும். நேற்றும், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை. அதற்குக் காரணம், விரிவான அறிக்கையில் இருக்கிறது. அந்தமான் பகுதியில உருவான, புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, சற்று தெற்கு நோக்கி நகர்ந்து உருவாகி இருக்கிறது. ஆகவே, மையத்தில் மாற்றம், இதன் காரணமாக, மழைப்பொழிவு இடம் மாறுவதன் காரணமாக, மழைப்பொழிவு தமிழகத்தில், வரக்கூடிய நாட்கள்ல, இருபத்தி ஆறாம் தேதி வரைக்கும், மழைப்பொழிவு கொடுக்கவே வாய்ப்பு இருக்கிறது
ஆக, வரக்கூடிய இருபதாம் தேதி, மதியம், வட கடலோர மாவட்டங்களில், தொடங்கக்கூடிய மழை, வட கடலோரம், மற்றும், வட உள் மாவட்டங்களில், நேற்று, வரைந்த, வரைபட படியே, இருவத்தி ரெண்டாம் தேதி வரைக்கும், மழைப்பொழிவை, கொடுத்த பிறகு, இருபத்தி மூன்றாம் தேதி, திசைமாறி, தென் தமிழகம் வழியாக, அரபிக் கடலுக்கு போகும் அது தரைவழி, அரபிக் கடலுக்குப் போனால், எப்படி மழைப் பொழிவைக் கொடுக்கும்ன்னா, மிதமாக, லேசாக, ஆங்காங்கே, பனி மழையைக் கொடுக்கும். மன்னார் வளைகுடா பகஜலசந்தி வழி பொழியப் போனால், கூடுதல் மழை பொழிவைக் கொடுக்கும். இலங்கை மீது ஏறி, தென் தமிழகம் போனால், மேலும் கூடுதல் மழை பொழிவைக் கொடுக்கும். எப்படியோ, இருபத்தி ஏழாம் தேதிவரை, மழைப்பொழிவு இருக்கிறது. விரிவான அறிக்கை பார்த்து, பயன்பெறுங்க



Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform

Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog