தரையில் தாழ்வுப்பகுதி அரபிக்கடல் நோக்கி கனமழை எங்கெங்கே?
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் பன்னிரண்டு சனிக்கிழமை, காலை பதினோரு மணி, ஒரு நிமிட ஆய்வு அறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையை பார்க்கவும். நேற்று, மயிலாடுதுறை மாவட்டத்திற்கும், கடலூர் மாவட்டத்திற்கும், பாதிக்கும் மழையை கொடுத்து, கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்பொழுது செயலிழந்து, டெல்டா மாவட்டத்தின் வடக்கு பகுதியில, தரைப்பகுதியில நீடித்துக் கொண்டிருக்கிறது. இது படிப்படியாக, மேற்கு நோக்கி நகர்ந்து, நாளை அரபிக்கடலை அடைந்து, அங்கே மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதியாகி, தீவிரமடைந்து, Oman, Yeman நாட்டை நோக்கி பயணிக்கும் இதன் காரணமாக, இது, மேற்கு நோக்கி, நகரும் பட்சத்துல, மேற்கு நோக்கி, நகர இருக்கிற காரணத்தினால, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்ல, படிப்படியாக, மழைப்பொழிவு அதிகரிக்கும். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பகுதியில, தற்பொழுது, மழை தொடங்கி இருக்கிற நிலையில, இன்னும், தென்மாவட்டங்கள்லயும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்ல, உள் மாவட்டங்கள்லயும், மழைப்பொழிவு கூடும். இது அரபிக்கடல் போன பிறகு, கிழக்கு காற்று இருப்பதன் காரணமாக, வரக்கூடிய திங்கட்கிழமை வரைக்கும், விட்டுவிட்டு மழை, தமிழகத்துல ஆங்காங்கே இருக்கும். இது, இந்த நிகழ்விற்கு, அடுத்த நிகழ்வு, வரக்கூடிய பத்தொன்பது, இருபது, இருபத்தி ஒண்ணு இருபத்தி ரெண்டு ஆகிய தேதிகள்ல, இதைவிட கூடுதல் மழைப்பொழிவை கொடுக்கும்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Link 👇👇👇👇
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
